மின்சார சபையை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

கொழும்பு,ஜுன் 01

இலங்கை மின்சார சபைக்கு பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்றக் (கோப்) குழுவில் முன்னிலையாகுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 9 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் இலங்கை மின்சார சபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினை எதிர்வரும் 7 ஆம் திகதி பொது நிர்வாகங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 8 ஆம் திகதி முன்னிலையாகுமாறு மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விவசாய அமைச்சு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம், மீன்பிடி அமைச்சு ஆகியவற்றினை அரசாங்க நிதி பற்றிய குழுவில் அடுத்த வாரம் முன்னிலையாகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *