
கல்முனையில் த.தே.கூ வின் தயவில் தமிழர்களுக்கு எதிரான அறுவைச் சிகிச்சை!
இலங்கை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு எப்போது தீர்வு கிட்டுமென உலக நாடுகள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.
இன்றளவும் அத்தாயாவசிய பொருட்களின் கேள்விகள் நாளுக்கு நாள் அதகரித்தவண்ணமே காணப்படுகின்றது. அரச தலைவர்கள் தங்களது பதவிகளை விட்டு வெளியேறக்கோரி இன்றுவரை போராட்டங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளது.
இவ்வாறான இறுக்கமான சூழ்நிலையிலும் மே 18 தமிழர்களால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இம்முறை அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஒன்றுபட்ட சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் மே 18 ஐ தமிழர்கள் தாங்கள் இழந்த உறவுகளின் பெயரால் அனுஷ்டிக்க ஆதரவை வழங்கியதுடன், “கோட்டா கோ கம” போராட்டங்கள் மூலம் கோட்டா அரசு சிங்கள மக்கள்மீது மேற்கொண்ட அடக்குமுறைகள் மூலம் 2009 ல் தமிழர்கள்மீது எவ்வாறான அத்துமீறல்கள் நடத்தப்பட்டிருக்குமென்பதை உணர்ந்தவர்களாக சிங்கள இளையோர் சிலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டுமிருந்தனர்.
கடந்த சில மாதங்களாக மக்களின் ஒட்டுமொத்த பார்வையும் நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைபற்றி சிந்திக்கையில் ஒவ்வொரு அத்தியாவசியப் பொருட்களுக்கும் நிரையில் நிற்கவே நேரம் சரியாகும் சூழ்நிலையிலும் கூட “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு” என்பதுபோல் கல்முனையில் தமிழர்கள் மீது முஸ்லிம் அரசியல் வாதிகளது கைங்கரியங்கள் நிறைவேற்றப்பட்டவண்ணமே இருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூலம் தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களின் பரமவிரோதிகளென்ற தோற்றத்தை வலுப்படுத்தி, எந்த ஆட்சி வந்தாலும் அவர்களுடன் ஒட்டுண்ணி அரசியல் நடத்தி தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை அபகரிப்பது தொடக்கம் நியாயமான கோரிக்கைகளை மழுங்கடிக்கச் செய்வதுவரை தமது தமிழர்களுக்கு எதிரான கைங்கரியங்களை கச்சிதமே அரங்கேற்றி வருகின்றனர்.
இவ்வாறான சூழ் நிலையிலும்கூட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் அண்மையில் கல்முனையில் இடம்பெற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கோட்டா கோ” ஆர்ப்பாட்டங்களில் சில உள்ளூர் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுடன் கலந்துகொண்டமையானது இன்னும் கல்முனை தமிழர்களை அரச இயந்திரத்திலிருந்து தூரவிலக்கும் செயற்பாடாகவே பார்கப்படவேண்டியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் கல்முனையில் “கோட்டா அரசை” எதிர்க்கின்றனர் என்ற செய்தி முஸ்லிம் அரசியல் தலைவர்களாலேயே கொழும்பு வரை கொண்டு சேர்க்கப்படும் என்பதை சுமந்திரன், சாணக்கியன் அறியாமல் இருக்கலாம் ஆனால் கல்முனை தமிழர்கள் நன்கறிவார்கள்.
உண்மையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கல்முனை தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பினருக்கும் முஸ்லிம் தரப்பினருக்குமிடையில் வெளிப்படைத் தன்மை வேண்டும். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்தரன், சாணக்கியன் ஆகயோர் தங்களது முஸ்லிம்கள் சார் நடவடிக்கைகள் கல்முனையில் தமிழர்களுக்கெதிரான முஸ்லிம்களின் அறுவைச் சிகிச்சைகளில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்பது தொடர்பில் தெளிவடைதல் வேண்டும். தமது மேற்கத்திய பாணியிலான அரசியல் ஹரீஸ் போன்ற விபச்சாரப் பாணியிலான அரசியல்வாதிகளின் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எவ்வாறு துணைபோகின்றது என்பதில் தெளிவுகாண வேண்டும்.
கல்முனையில் இடம்பெற்ற “கோட்டா கோ” ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக கல்முனை மாநகர சபைக்கு ஆணையாளராக நியமிக்கப்பட்டிருந்த இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் என்.சிவலிங்கம் தமிழர் என்ற ஒரே காரணத்தால் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் இனால் கடமையேற்புக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கல்முனை மேலதிக மாவட்ட பதிவாளர் காரியாலயம் மற்றும் காணி பதிவகத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கருமபீடம் மூடப்பட்டு அது கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் முஸ்லிம்களுக்கு பூஸ்டராக செயற்படும் சாணக்கியனோ அல்லது சுமந்திரனோ பாராளுமன்றத்தில் வாய்மூடி மௌனியானதன் மர்மம் என்னவென புரியவில்லை. இவர்களது இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் அடிமட்டத்தில் இருக்கின்ற கூட்டமைப்பின் ஆதரவை அதள பாதாளத்திற்கே கொண்டு செல்லும் என்பதை எதிர்வரும் தேர்தல்கள் உணர்த்தும்.
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு பிரதேச செயலக விடயத்தில் த.தே.கூட்டமைப்பு கல்முனையில் விதைத்த விதையின் அறுவடையை கடந்த பொதுத் தேர்தலில் அம்பாரையில் அறுவடை செய்ததை அவர்கள் மறந்திருக்கமாட்டார்கள். தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குகளில் 30,000 க்கும் மேலான வாக்குகள் த.தே.கூ வுக்கு எதிராகவே அளிக்கப்பட்டிருந்ததன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 50% க்கு மேலானவர்கள் த.தே.கூ வின் மீதிருந்த அதிர்ப்த்தியை வாக்களிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற 25,000 வாக்குகள்கூட வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் பகீரதப்பிரயத்தனத்தினால் பெறப்பட்டதேயன்றி கட்சியின் செல்வாக்கை குறிப்பிட்டு கூறமுடியாத நிலையே இருந்தது. இவை யாவும் கல்முனை தமிழர்கள் தொடர்பில் த.தே.கூ பாராமுகமாக நடந்துகொண்டது மட்டுமன்றி தமிழர்கள் மீது சகல விதத்திலும் தங்களது அளுத்தங்களை பிரயோகித்து அடக்கி ஒடுக்க நினைக்கும் முஸ்லிம் காங்கிரசுடனான ஊடல் அரசியல் காரணமாகவும் என்பது அனைவரும் அறிவர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு உப அலுவலகமாக இருக்கலாம். அதன் மூலம் அங்கு பிரதேச செயலாளராக நியமனம் பெறும் இலங்கை நிருவாக சேவை அதிகாரி உப அதிகாரியாக செயற்படலாம் அதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனாலும், நிர்வாக ரீதியல் தனியான பிரதேச செயலகமாக 29 கிராம சேவையாளர் பிரிவுகளுடன் நிருவாகம், திட்டமிடல், சமூக சேவை, கிராம அபிவிருத்தி, விளையாட்டு, இளைஞர் சேவை, மகளிர் பிரிவு, காணி, மோட்டார் வாகன பிரிவு, பதிவாளர் என இன்னும் பல ஒரு பிரதேச செயலகத்திற்கு தேவையான அனைத்து திணைக்களங்களின் ஆளணியினருடனும் இயங்கிவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் இவ் ஆளணியினருடைய அனைத்து அலுவலக விடயங்களுக்குமான தலமை அதிகாரியாக இப்பிரதேச செயலகத்தின் உப பிரதேச செயலாளரே செயற்படுகின்றார். இதில் எந்த திணைக்களத்தின் அதிகாரிகளும் உப அதிகாரிகள் அல்லர்.
இவ்வாறான நிலையில் வழமையான செயற்பாடுகளில் பதிவாளர் திணைக்களத்தின் கீழ் இயங்கும் காணிப் பதிவகம் மட்டும் தமது செயற்பாடுகளை கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டு வந்தமைக்கான காரணம் என்ன? இச்செயற்பாடுகளில் அரசியல்வாதிகளுடன் கல்முனை பிரதேச செயலாளரும் இணைந்து தமது செயற்பாடுகளை வடக்கு பிரதேச செயலக விடயத்தை நீர்த்துப்போகச் செய்ய முடுக்கிவிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அரச அதிகாரிகள் என்போர் அரசின் கொள்கைகளை மக்களுக்கு செயற்படுத்துவதை அவர்களது பிரதான கடமையாக கொண்டிருக்க வேண்டும். இந்த நிலையில் கல்முனை பிரதேச செயலாளர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தன்னால் நிர்வாகம் செய்யப்படவேண்டுமென எண்ணி செயலாற்றுவதாக அறிய முடிகின்றது. இதே சிந்தனை உத்தியோகத்தர் ஒவ்வொருவருக்கும் எழுமாயின் வடக்கு பிரதேச செயலகத்தின் சம்பந்தப்பட்ட அனைத்து துறை உத்தியோகத்தர்களுக்கும் மேற்பார்வை உத்தியோகத்தர்கள் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும் என்கின்ற நிலைமை ஏற்படும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உத்தியோகத்தர் விடயத்தில் இனரீதியான எந்த பாரபட்சங்களையும் மேற்கொள்வதில்லை மாறாக ஏனைய அலுவலகங்களுக்கு முன்மாதியாகவே இயங்கி வருகின்றது. நிருவாக கட்டமைப்புக்கு ஏற்ப பாகுபாடின்றி அனைவருக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், கல்முனை பிரதேச செயலகத்திலோ அண்மைக்காலமாக இனரீதியாகவே சகலமும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. ஏறத்தாள முப்பது வருடங்குக்கும் மேற்பட்ட சேவை அனுபமுடைய முதலாம் தர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் இரண்டாம் தர அல்லது மூன்றாம் தர குறைந்த கால அனுபவம் உடைய உத்தியோகத்தர்களால் முகாமை செய்யப்படுகின்றனர். உப அலுவலகம் என முஸ்லிம் அரசியல் வாதிகளாலும் சில அரச அதிகாரிகளாலும் சுட்டிக் காட்டப்படும் வடக்கு பிரதேச செயலகத்தில் அதிவிசேட தர முகாமைத்துவ உத்தியோகத்தர் நிருவாக உத்தியோகத்தராக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில் கல்முனை பிரதேச செயலகத்தில் முதலாம் தர முகாமைத்துவ உத்தியோகத்தரே நிருவாக உத்தியோகத்தராக பணிக்கமர்த்தப்பட்டுள்ளார். கல்முனை பிரதேச செயலாளர் தனக்கு கீழ் இயங்கும் அலுவலகமாக வடக்கு பிரதேச செயலகத்தை கருதினால் விசேட தர உத்தியோகத்தரை கல்முனைப் பிரதேச செயலகத்தில் பணிக்கு அமர்த்த முயற்சித்திருக்க வேண்டும்.
இனரீதியாக அலுவலகங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் இவ்வாறு இனரீதியான முரண்பாடுகளின் தோற்றுவாக சமூகங்கள் கலந்து வாழும் கல்முனையில் அரச நிறுவனங்களே செயற்பட்டுவருவது எதிர்காலத்தில் தனியான சமூகங்கள் வாழும் பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்கள்வரை பாகுபாடுகள் விரிவடைய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
நிதி முகாமைத்துவம் தவிர அனைத்து பிரதேச செயலக கடமைகளும் வடக்கு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி தொடர்பான கடைமைகளைப் பெறுவதில் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் விபச்சார அரசியல் வியூகத்தால் தடுக்கப்பட்டிருந்தன.
இலங்கையை பொறுத்தவரை மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்கள்தான் ஆட்சீபீடம் ஏறுவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்முடியாது. வருகின்ற ஆட்சியாளர்களுடன் இணைந்து வங்குரோத்து அரசியல் செய்வது முஸ்லிம் தலைமைகளின் கடந்தகால வரலாறு. தமிழர்களுக்கும், தமிழர் பிரதேசங்களுக்கும் அரசியல் சம்பந்தமான தீர்வாயினும் அதேபோல் சாதாரண அன்றாட நிருவாக தேவைகளும்கூட அதே சிங்களப் பெரும்பான்மை அரசிடமிருந்தே கிடைக்கப்பெற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரச எதிர்ப்பு அரசியலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் முஸ்லிம் கட்சிகள் தமிழர்களுக்கு எதிரான தமது தேவைகளை மிகவும் எளிதாக அரசைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்கின்றன.
இந்த முஸ்லிம்களின் தந்திரோபாய தமிழர் எதிர்ப்பு அரசியலை அம்பாரை தமிழர்கள் எப்போதோ உணர்ந்துவிட்டனர். அதன் எச்சரிக்கையின் எதிரொலிதான் கடந்த பொதுத் தேர்தலின் பலாபலனாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரை மட்டுமன்றி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழக்க நேரிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்திய இடைவெளியை சரியாக பயன்படுத்திய கப்பலோட்டியும் “ஆப்பரேசன் சக்சஸ் ஃபேசன் டெத்” என்பது போல் வந்தவேலையை கச்சிதமாக முடித்துக்கொண்டு மாயமானார்.
அதன் பின்னரும் அவர்கள் போக்கில் மாறுதல்கள் இல்லாத “இணங்க மறுப்பவர்களுடன் இணங்கிப் போவோம்” என்ற நிலை தொடர்கையில், அம்பாரை தமிழர்களால் “ஏற்கனவே எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் இனி இழப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை” என்பதாய் அம்பாரையில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு துடைத்து எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
✍️#கட்டப்பன்