21வது திருத்தம்; இறுதி கலந்துரையாடல் நாளை!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் நாளை (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடப்படவுள்ளது.

அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று விளக்கமளிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் காலை 10.00 மணிக்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் விளக்கமளிக்க உள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *