யாழ்ப்பாணம் – உடுவில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு வைத்தியசாலையில் இன்று 10 மணியளவில் 6 மாத குழந்தைகளுக்கு ஊசி வழங்குவதாக தாய்மார்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வைத்தியசாலையில் குழந்தைகளுக்கான ஊசி மருந்துகள் காலம் தாழ்த்தி கொண்டுவரப்பட்டதுடன் வைத்திய நிர்வாகம் அலட்சியத் தன்னையுடன் நடந்துள்ளனர்.
இந்த அசட்டத்தனமான செயற்பாட்டினால் வைத்தியசாலைக்கு வந்த தாய்மார் மற்றும் குழந்தைகள் அசௌகரியத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் தொழில்களை விட்டு வந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து தாய்மார்களில் ஒருவர் எமது சமூக ஊடகத்துக்கு தெரிவித்ததனைத் தொடர்ந்து அங்கு சென்ற பிற்பாடே குழந்தைகளுக்கான ஊசிகள் போடப்பட்டன .
குறித்த சம்பவம் தொடர்பில் தாய் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ;
இந்த வைத்தியசாலையில் 6 மாத குழந்தைகளுக்கான ஊசி போடும் கிளினிக்காக காலை 9 மணியளவில் இருந்தே கிட்டத்தட்ட 25 தாய்மார்கள் காத்துக்கொண்டிருந்தோம், ஆனால் 11 மணி ஆகியும் ஊசி போடுதல் பணி ஆரம்பமாகவில்லை.
ஏன் ஊசி வரவில்லை? என்று கேட்டதற்கு கொண்டு வருவதற்கு நபர்கள் இல்லை என பதில் அளித்ததுடன் வேறொரு நாள் வந்து ஊசியினை போட்டுக்கொள்ளுமாறு அறிவித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் எமது செய்திப்பிரிவு உயரதிகாரிகளை தொடர்புகொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



பிற செய்திகள்