பயணக் குழப்பங்களைச் சரிசெய்ய விமானப் போக்குவரத்து நிறுவன தலைவர்கள் முன்வர வேண்டும்: கிராண்ட் ஷாப்ஸ்

பயணக் குழப்பங்களைச் சரிசெய்ய விமானப் போக்குவரத்து நிறுவன தலைவர்கள் முன்வர வேண்டும் என போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

அரையாண்டு விடுமுறையில் விமான நிலையங்களில் ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்க, பயண நிறுவன தலைவர்களிடம் தங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்று போக்குவரத்துச் செயலாளர் கோரியுள்ளார்.

பல பிரித்தானியர்களின் விடுமுறை நாட்களைப் பாழாக்கிய நீண்ட வரிசைகள் மற்றும் விமானங்கள் இரத்து செய்யப்படுவது இதயத்தை உடைப்பதாக அவர் மேலும், கூறினார்.

புதன்கிழமை பிரிட்டிஷ் எயார்வேஸ் மற்றும் ஈஸிஜெட் ஆகியவற்றால் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான விமானங்களை விமான நிறுவனங்கள் ரத்து செய்தன.

இந்தநிலையில், வங்கி விடுமுறை வார இறுதி நாட்களில் இடையூறு மோசமடையலாம் என்ற அச்சம் உள்ளது.

கொவிட் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் தேங்கிக் கிடக்கும் தேவையைச் சமாளிக்க விரைவாக ஆட்சேர்ப்பு செய்யப் போராடியதாக விமான நிறுவனங்கள் கூறுகின்றன, அதே நேரத்தில் தொழில்துறை நிறுவன தலைவர்கள் இந்தத் துறையை தொற்றுநோயிலிருந்து சரியாக மீட்க உதவவில்லை என்று அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *