
அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழப்பு!
ஒக்லஹோமா பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.சந்தேகநபரும் இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது