தாக்கியதாக முறைப்பாடு செய்த வயோதிப மாது உயிரிழப்பு!

அயல் வீட்டில் வாசிப்பவர் தன்னை தாக்கியதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த வயோதிப மாது ஒருவர் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வதிரி, கரவெட்டியைச் சேர்ந்த சபாநாயகம் இலட்சுமி பிள்ளை (வயது- 72) என்பவராவார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மேற்படி வயோதிபமாது நேற்று புதன்கிழமை(01) காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனது அயல் வீட்டுக்காரர் தன்னை தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு முறைப்பாடு செய்து விட்டு வீடு திரும்பிய அவர் பிற்பகல் 2 மணி அளவில் வீட்டில் மயங்கி சரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். பிரேத பரிசோதனையின் பிற்பாடே இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் தகவல் தெரியும் எனப் பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *