க.பொ.த. சாதாரணத்தர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் 17 முதல் ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையிலேயே இந்த அறிவிப்பானது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தப் பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாகவும் முதல் கட்டம் எதிர்வரும் 17ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இரண்டாம் கட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு எதிர்வரும் 5ஆம் திகதியிலிருந்து 8ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவிவரும் சவால்களுக்கு மத்தியில் இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைகள் வெற்றிகரமாக நடத்து முடிந்துள்ளன.

இந்த நிலையில், பரீட்சைகள் பற்றி சில முறைபாடுகள் மாத்திரமே கிடைக்கப் பெற்றதாகவும் இந்த முறைபாடுகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *