
தெற்கு அதிவேக வீதியில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சியின் மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர்.
குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வீரகெட்டிய – பெதிகம இடையேயான சந்திப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது,
மேலும் ,அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த வண்டியின் பின்பகுதியில் ஏற்றப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டி பாதுகாப்பற்ற காரணத்தினால், பாதையில் நுழைய அனுமதிக்க முடியாது என பொலிஸார் கூறியதையடுத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்