தேயிலை கொழுந்து சேகரிப்பவரால் சிறுமி துஷ்பிரயோகம்

கொழுந்தை சேகரிக்கும் 35 வயதானவர், 13 வயதான பாடசாலை மாணவியை, அச்சிறுமி​யின் வீட்டில் வைத்தே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த சந்தேநபர், கலவான தெல்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை தொழிற்சாலைகளுக்கு ​பச்சை கொழுந்துகளை சேகரிக்கும் மேற்படி நபர், சிறுமி தனியாக இருப்பதை கண்டு, அச்சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *