முல்லைத்தீவு – மாங்குளம் நீதவான் நீதிமன்றத்தில், நீதிபதி மற்றும் நீதிமன்றத்தினை அவமதித்துப் பேசிய குற்றவாளியான வெளிநாட்டுக் குடியுரிமை கொண்ட நபரை எதிர்வரும் 07.06.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
கடந்த 31.05.2022 அன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுக் குடியுரிமையினை கொண்ட பொக்கணை பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது மாங்குளம் நீதிமன்றில் நீதிபதி, நீதிமன்றத்தினை அவமதித்து நீதிமன்றத்திற்குள் பேசியுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 07.06.2022ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சேதம் ஏற்படுத்தியமை மக்கள் மத்தியில் குழப்பத்தினை உண்டு பண்ணித் தாக்குதல் முயற்சியினை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்