விசேட பாதுகாப்பில் சிகிச்சை பெறும் துமிந்த!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாஇ சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பில் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன எக்கநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பு உயர் நீதிமன்றத்தினால் இடைநிறுத்தப்பட்டதையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் துமிந்த சில்வா நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், துமிந்த சில்வா கைது செய்யப்பட்டதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளால் அவரை பொறுப்பேற்றதாகவும் எக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *