
இந்திய உதவித் திட்டத்தின் கீழ் தற்போது கிடைக்கப்பெற்ற உதவிகளை மலையக மக்களுக்கு பாராபட்சம் காட்டாது வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்திய உதவித் திட்டம் தொடர்பில் மலையக அரசியல்வாதிகள் மத்தியில் கூட்டு வேலைத்திட்டம் ஒன்று தேவை? இல்லாத விடத்து கடந்த காலங்கள் போன்று அவை சிதறடிக்கப்படலாம்.
தமிழக அரசு வழங்கிய 2 பில்லியன் உதவிக்கான பொருளாதார வேலைத்திட்டம் என்ன?இந்திய உதவி முறையாகப் பகிரப்பட வேண்டும்.
கொவிட் கால உதவி போல் முறையற்ற வகையில் பகிரப்படக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.
உலக வங்கி இலங்கைக்கு நிதி உதவி செய்ய ஏன் மறுக்கிறது, அப்படியாயின் இலங்கையில் முறையான பொருளாதார திட்டம் மற்றும் கொள்கை ஒன்று இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.
பிற செய்திகள்