13 வயது பாடசாலை மாணவிக்கு நிகழ்ந்த துயரம்

கலவான,ஜுன் 02

கலவான, பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் ஒருவரை வியாழக்கிழமை (02) கைது செய்துள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கலவானை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் தயாவங்ச மற்றும் பொலிஸ் பரிசோதகர் சமரக்கோன் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *