மீண்டும் இலங்கை அணியுடன் இணைந்த மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இருபதுக்கு இருபது தொடர் மற்றும் சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக லசித் மாலிங்க, செயற்படவுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக தனது பணியினை மேற்கொண்டிருந்த மாலிங்க, தற்போது இலங்கை அணியுடன் இணைந்துள்ளார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 3 இருபதுக்கு இருப்பது போட்டிகள், ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதலாவது இருபதுக்கு போட்டி , கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில், எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *