
இரத்தினபுரி – எலபாத – மஹிரகல பிரதேசத்தில் 100 ரூபாவை கொடுக்க மறுத்த 27 வயதுடைய யுவதியொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வேலை முடிந்து வீடு திரும்பும் போது வீதியில் தங்கியிருந்த இளைஞன் ஒருவன் குறித்த யுவதியிடம் 100 ரூபாவை கோரியதாகவும், அதனை கொடுக்க மறுத்துள்ள நிலையில் யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிற செய்திகள்