
கொழும்பு,ஜுன் 02
எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுத்தருமாறு கோரி கொழும்பின் சில பகுதிகளில் மக்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கமைய எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுத்தருமாறு கோரி மருதானை ஆனந்த கல்லூரிக்கு முன்னதாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கபட்டது.
நீண்ட காலமாக எரிவாயு கிடைக்காமை காரணமாக பொதுமக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு-12 குணசிங்கபுர பகுதி மக்கள் தமக்கு உரிய முறையில் எரிவாயு கிடைக்கமையினால் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், எரிவாயு விநியோகம் தொடர்பில் உரிய முறைமையொன்று அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.