
பல்வேறு திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது!
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சிறப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி .எம் சதுரங்க தலைமையிலானஅணியினரால் இன்றைய தினம்(02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 17.06.2022 புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்திற்கு சென்ற முதியவர்கள் அணிந்திருந்த தோடு மற்றும் சங்கிலி என்பனவற்றை பறித்துச் சென்றது உட்பட பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டதுடன் தடயப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 16ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.