மலையகத்தில் உள்ள சகலருக்கும் உதவி பொருட்களைப் பாரபட்சமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமாகிய செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் பாரிய சேவை புரிந்துள்ளோம். இந்தியாவில் இருந்து பொருட்கள் வந்தவுடன் நாங்கள் பகிர்ந்தளித்தோம்.
அதாவது மாவட்டத்திற்கு பகிர்ந்தளித்தோம். கிராம சேவகர்களிற்கு பாரிய பொருப்பு காணப்படுகிறது.
அங்கு 2000 குடும்பம் இருக்கின்ற நிலையில் 200 குடும்பங்களிற்கு மாத்திரமே வழங்கப்படுகிறது.எனவே மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.
தமிழக அரசு 40 மெட்ரிக் தொன் அரிசி மூட்டைகளே வழங்க உள்ளது.
அவற்றுள் 9மெட்ரிக் தொன் அரசி வழங்கப்பட்டுள்ளது. 31 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்படும்.
நாங்கள் கிராமத்தில் உள்ள மக்களிற்கு பொருட்களை வழங்கவே நாங்கள் முயற்சிகளை எடுக்கின்றோம்.
ஆனால் முழுமையாக பொருட்களை வழங்க வேண்டும். குறிப்பிட்ட கிராம சேவக பிரிவிற்கு பொருட்களை வழங்க வேண்டும்.
நாங்கள் கூறுவது போல மக்களிற்கு கிராம சேவகர் பொருட்கள் வழங்குவது இல்லை.இது மனசாட்சிக்கு விரோதமான செயல்.
எனவே 100% மக்களிற்கு இப் பொருட்களை வழங்க வேண்டும் அவ்வாறு இப் பொருட்களை வழங்க முடியாவிடில் எனக்கு அதற்கான வேறு வழியை பின்பற்ற முடியும் -என்றார்.