முல்லைத்தீவு மாவட்ட கடலில் இடம்பெறும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையால் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடல்வளம் அழிக்கப்படுவதாகவும் இதனை உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடற்தொழிலாளர்கள் அதிகாரிகளை அழைத்து கடற்கரையில் தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு கடலில் இடம்பெறும் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை பிடித்து தருவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மற்றும் கடற்தொழில்நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள்,பொலீசார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு உறுதி மொழிகள் வழங்கப்பட்ட நிலையிலும் இதுவரை அது நடமுறைப்படுத்தப்படவில்லை அதற்கான காரணம் என்ன என கடற்தொழிலாளர்கள் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கும் கவனயீர்ப்பு நடவடிக்கையாக சங்கங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் படகுகளில் முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் வந்து கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அடங்கிய சங்கங்களில் மூன்று சங்கங்கள் இந்த தடைசெய்யப்பட்ட தொழிலை அதிகமாக செய்கின்றார்கள் குறிப்பாக மாத்தளன் பகுதியிலேயே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதற்கு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி உடந்தையாக காணப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இவ்வாறான நடவடிக்கையினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடல் வளம் அடியுடன் அழிக்கப்பட்டு வருவதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இதன்பேது முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் எஸ்.கலிஸ்ரன் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்கள்.
எரிபொருள் விலையேற்றத்திலும் அதிகளவான படகுகள் அனுமதியற்ற முறையில் தெற்கில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குளாய் பகுதியில் வந்து நிற்பதாகவும் இதனை கட்டுப்படுத்தவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டு களாக சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுபடுத்தவில்லை எனமீனவர்கள் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை பிடிப்பதற்கு முழுமையான அதிகாரம் உள்ளது மீனவர்களின் பிரச்சினைக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு தரவில்லை என்றால் அடுத்த கட்டம் வரும் பிரச்சினைக்கு நீங்கள்தான் பொறுப்பு என கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி முன்னிலையில் மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் கலிஸ்ரன் உள்ளிட்ட அதிகாரிகள் பிரசன்னமாகி மீனவர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இதன்போது கடற்படை எங்களுக்கு எப்போது உதவி செய்கிறதோ அப்போதுதான் பிடிப்பது விரைவாக செய்ய சொல்லி கடிதம் எழுதியுள்ளோம் கடற்படை இல்லாமல் கடலுக்குள் போகமுடியாது மீனவர்களும் அதனை அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளதுடன் நாளை வட்டுவாகல் கோட்டபாய கடற்படை தளத்திற்கு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் சென்று கடற்படையினருடன் கதைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த நீண்டகாலமாக கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரையும் கட்டுப்படுத்தாத நிலமை தொடர்ந்துவருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.




