அனுர, இலங்கைக்கான சீன தூதுவருக்கிடையே சந்திப்பு

கொழும்பு,ஜுன் 02

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் இடையே வியாழக்கிழமை (02) சந்திப்பொன்று இடம்பெற்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டில் நிலவிவரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் விளம்பரச் செயலாளர் விஜித ஹேரத் மற்றும் சீனத் தூதரகத்தின் இரண்டு அரசியல் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *