சீனாவின் உயிர்காக்கும் உபகரணங்கள் இன்று நாட்டை வந்தடையும்!

சீனாவினால் மானியமாக வழங்கப்படும் 500 மில்லியன் யுவான் பெறுமதியான மருந்துகளின் முதலாம் தொகுதி இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இரண்டாம் தொகுதி மருந்துகள் இந்த மாத நடுப்பகுதியில் நாட்டை வந்தடையும்.

முதலாம் தொகுதியில், உயிர்காக்கும் உபகரணங்கள் மற்றும் 2 இலட்சத்து 56 ஆயிரத்து 320 சிரிஞ்சுகள் உள்ளடங்குகின்றன.

இரண்டாம் தொகுதியில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து 320 சிரிஞ்சுகள் இம்மாத நடுப்பகுதியில் நாட்டுக்கு வரவுள்ளன.

இரண்டு தொகுதி மருந்துப்பொருட்களும் இலங்கையின் 6 மாதகால பயன்பாட்டுக்கு போதுமானதாகும் என சீன தூதரகம் ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *