அட்டுழுகமவில் சிறுமி கொலை; மேலதிக வகுப்புக்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

மூதூர் பிரதேசத்தில் இயங்குகின்ற மேலதிக வகுப்புக்களை குறித்த நேரத்திற்குள் நடாத்தி முடிக்க வேண்டுமென மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் அறிவித்தல் விடுத்துள்ளார்.

அட்டுழுகமவில் சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை, வவுனியாவில் சிறுமியொருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட காரணங்களை வைத்து சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் மாத்திரமே மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்பட வேண்டுமென மூதூர் தவிசாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதனை மீறி மேலதிக வகுப்புக்களை நடாத்தி ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு உரியவர்களே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தவிசாளர் அவ் அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிவித்தலின் பிரதிகள் மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர், மூதூர் பிரதேச செயலாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கு மூதூர் பிரதேச சபையின் தவிசாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *