யாழ். சிறுவிளான் பகுதியில் 20 பவுண் நகை திருட்டு

யாழ், மே 03

இளவாலை – சிறுவிளான் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு 20 பவுண் நகை திருட்டுபோயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 கொண்டாட்டத்தில் அதிகளவான ஆண்கள் மது விருந்தில் ஈடுபட்ட பின்னர் தூங்கிவிட்டனர்.  இதை பயன்படுத்திய திருடன், வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்றுள்ளான். காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் அனைத்தும் திறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது. அத்துடன் நகை திருட்டு போன வீட்டில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் கைத்தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.  இதுவரை சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *