
தெற்கு அதிவேக வீதியில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சியின் மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளமை தொடர்பில் மனோ கணேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் வெளியிட்ட கண்டன பதிவில்,
”கடமை செய்த பொலிஸ் அதிகாரிகளிடம் முறையற்று நடந்து, கெட்ட வார்த்தை பேசிய எம்.பி வெதாரச்சியின் மகன், மருமகள் பற்றிய சம்பவத்தை வன்மையாக நான் கண்டிப்பதுடன், சம்பவத்தை பகிரங்கமாக கண்டிக்குமாறும், தன் மகன், மருமகள் என்போரை அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வலியுறுத்துமாறும் எம்பி வெதாரச்சியை கோருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்