இலங்கையில் இனி பைகளுக்கும் பஞ்சம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தொடராக பாடசாலை பைகள், தொழிலுக்கு கொண்டுசெல்லும் பைகள், வெளிநாட்டு பயணப் பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பயணப் பைகளின் விலைகளும் கூடுதல் அளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உள்நாட்டு பைகள் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலைகள் அதிகரித்தமையும் இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாகும் என உள்ளளூர் பைகள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துடன், தற்போது அதிக விலையில் காணப்படும் பைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என பைகள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலர் பாடசாலை பைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

முன்னர் 450 ரூபாவாக காணப்பட்ட சிறிய பைகள் தற்போது 950 ரூபாவாகவும், 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பைகள் தற்போது, 1,400 ரூபாவாக அதிகரித்துள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *