
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக நாளாந்தம் புகையிரத திணைக்களத்திற்கு இரண்டரை கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புகையிரத திணைக்களம் நாளாந்தம் 40 மில்லியன் ரூபாவிற்கு எரிபொருள் பயன்படுத்துவதாகவும், வருமானம் 15 மில்லியன் ரூபா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் புகையிரத திணைக்களத்தின் பங்களிப்பு மிகவும் முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புகையிரத கட்டணங்களை உயர்த்தாவிட்டால் திணைக்களத்தை கொண்டு நடத்த முடியாத நிலைமை ஏற்படும் என திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்