மோசமடையும் நிலையில் நாடு; வீதியில் தூங்கும் மக்கள்-வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகின்றது.

அதேவேளை கடந்த சில மாதங்களாக எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

அதேவேளை எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதேவேளை திட்டமிடப்படாத பொருளாதார கொள்கை மற்றும் அரசியற் குழப்பங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சிப் போக்கை சந்திக்கும் என்பதுடன் உணவுக்கான பஞ்ச நிலை நாட்டில் உருவாகுவதற்கான ஏதுநிலை தோன்றும் என பல்வேறு பொருளாதார நிபுணர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் எரிவாயு தட்டுப்பாட்டு பிரச்சினை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது.

கடந்த பல தடவைகள் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தாலும் எரிவாயுப் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.

நாடளாவிய ரீதியிலுள்ள எரிவாயு விநியோக நிலையங்களின் முன்னால் மக்கள் எரிவாயு சிலிண்டர்களுடன் காத்திருக்கும் நிலை தொடர்ந்து வருகின்றது.

மறுபக்கத்தில் கறுப்பு சந்தையில் எரிவாயு அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்ற சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் குறித்த எரிவாயு நிலையத்தின் முன்னால் வீதிகளில் இரவில் தூங்குகின்ற காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதேவேளை நாம் வாக்களித்து பாராளுமன்றிற்கு அனுப்பிய உறுப்பினர்கள் சொகுசு மாடி வீடுகளில் படுத்துறங்கும் போது அவர்களுக்காக வாக்களித்த நாம் இன்று வீதிகளில் உறங்கவேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

நாட்டின் நிலை மேலும் மோசமடையும்- சபா.குகதாஸ் எச்சரிக்கை!(வீடியோ இணைப்பு)

இலங்கைக்கு சரியான தலைமைத்துவம் கிடைக்கவில்லை;சொல்ஹெய்ம் கவலை!

கவலைக்கிடமான நிலையில் இலங்கை;விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அமெரிக்க துாதர்-வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சந்திப்பு!

முல்லையில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *