மற்றொருவர் சுட்டுக்கொலை – நாட்டில் அடுத்ததடுத்து நடக்கும் மர்மங்கள்!

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை – நிர்மலா மாவத்தை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *