ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களால் யாழ். நூலகத்துக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டு நிறைவை ஒட்டி கோட்ட கோ கமவில் கவனயீர்ப்பு நிகழ்வு கடந்த 01 ஆம் திகதி போராட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, அங்கிருந்து நல்லெண்ண அடிப்படையில் நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
பிற செய்திகள்