புதிய கூட்டணி தொடர்பில் விமல் வீரவன்ஸ வெளியிட்ட தகவல்

புதிய கூட்டணியின் பெயர் தொடர்பாகவே, யார் தலைமை வகிப்பார்கள் என்பது தொடர்பாகவோ இன்னமும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

முற்போக்குகொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ஸ, புதிய கூட்டணியின் தலைவராக தனது பெயரை முன்மொழிவதற்கு வாசுதேவ நாணயக்காரர் தயாராக உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை எதிர்கொண்டுள்ள சமூக அரசியல் நெருக்கடிகள் குறித்து கட்சியின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் விமல் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் மூன்றாம் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளைத் தவிர்ப்பதற்காக மக்கள் நிதானத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செயற்படவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *