புத்தளம் – மன்னார் வீதியின் 2ம் கட்டைப் பகுதியில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கேரளா கஞ்சா 37 பொதிகள் மற்றும் 50 லீற்றர் கசிப்புடன் ஆணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த நபரின் வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதே கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் 46 வயதுடை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாப் பொதிகள் மற்றும் கசிப்பு ஆகியவற்றை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்