குமார் சங்ககாரவின் நெகிழ்ச்சியான செயல்!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார இன்றையதினம் தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக அனுமதிப் பத்திரம் வழங்கும் அலுவலகம் முன் 2 மணி நேரத்திற்கும் மேலாக மக்களுடன் மக்களாக காத்திருந்தார்.

இந்நிலையில் சங்கக்காரவை வரிசையில் நிற்பதை கண்ட சில அதிகாரிகள் அருகில் வந்து அவருடன் கலந்துரையாடினர்.

அதேவேளை சங்கா தனது செல்வாக்கில் முன்னுரிமையில் தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றிருக்கலாம் ஆனால் அவர் அவ்வாறு செய்யாது மக்களுடன் மக்களாக காத்திருந்து சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தித்து சென்றமை அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *