
கொழும்பு,ஜுன் 03
நாளைய சனிக்கிழமை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி 12 தசம் 5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2 தசம் 3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்கள் சனிக்கிழமை சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இன்றுகொழும்பு நகரப் பகுதிக்கு மாத்திரம் 16 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் லிட்ரோ நிறுவனத்தினால் விநியோகிப்பட்டன.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இன்றைய தினம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவில்லை.
இந்த நிலையில் மீண்டும் எதிர்வரும் 8 ஆம் திகதி அளவிலேயே எரிவாயு சிலிண்டர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 ஆயிரத்து 500 மெட்ரின் டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையளவில் நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.