
மன்னார்,ஜுன் 03
மன்னார், பேசாலையில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 7 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேசாலையில் இருந்து வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் கடலிற்கு புறப்படத் தயரான படகுகளை கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, கடற்படையினருக்கும் மீனவர்களிற்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடற்படையினர் மீனவர் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டதனால், பாதிப்படைந்த மீனவர் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தீடையில் தாக்கப்பட்ட 6 மீனவர்கள், ஏனைய மீனவர்களின் உதவியுடன் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்பின்பு மீனவர்கள் கடற்படையினரிடம் மன்னிப்புக்கோரி, சமரசத்தின் அடிப்படையில் தொழிலிற்குச் சென்றனர்.
இந்த விடயம் தொடர்பாக மீனவர் சங்கங்கள், பங்குத் தந்தை ஆகியோர் கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் தீர்வு கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.