மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்: 7 பேர் வைத்தியசாலையில்

மன்னார்,ஜுன் 03

மன்னார், பேசாலையில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 7 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேசாலையில் இருந்து வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் கடலிற்கு புறப்படத் தயரான படகுகளை கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, கடற்படையினருக்கும் மீனவர்களிற்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடற்படையினர் மீனவர் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டதனால், பாதிப்படைந்த மீனவர் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தீடையில் தாக்கப்பட்ட 6 மீனவர்கள், ஏனைய மீனவர்களின் உதவியுடன் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்பின்பு மீனவர்கள் கடற்படையினரிடம் மன்னிப்புக்கோரி, சமரசத்தின் அடிப்படையில் தொழிலிற்குச் சென்றனர்.

இந்த விடயம் தொடர்பாக மீனவர் சங்கங்கள், பங்குத் தந்தை ஆகியோர் கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் தீர்வு கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *