கொழும்பு நீர் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 03

கொழும்பின் பல பகுதிகளிலும் சனிக்கிழமை(03)7 மணித்தியால நீர் விநியோகத்தடை அமல்படுத்தப்படவுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி வரை இவ்வாறு 7 மணித்தியால நீர் விநியோகத்தடை அமல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகன, மிரிஹான, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொட, பாகொட, விஜேராம முதல் ஹைலெவல் வீதியின் 7 ஆம் மைல் கல் வரையான பகுதி மற்றும் நுகேகொடை முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான அனைத்து உள் வீதிகள் ஆகிய பகுதிகளில் குறித்த காலப்குதியில் நீர் விநியோகத்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *