
கொழும்பு,ஜுன் 03
கொழும்பு மற்றும் கடுவெல பிரதேசங்களுக்கு சனிக்கிழமை (04) இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 9 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10 மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.