
அளுத்கம, ஜுன் 03
அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றிய போதைப்பொருளை மீள விற்பனை செய்த வழக்கின் அரச சாட்சியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் பேருவளை-மரதான பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவர் உயிரிழந்திருந்தார்.