மே-09 சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் முன்னெடுக்கப்படுகின்ற கைது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அதன் தலைவர் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 09ம் திகதி காலிமுகத்திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் காணொளிகளை ஆதாரமாக கொண்டு பொலிசார் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து
வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மே 09 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் பாரபட்சமாக இடம்பெறுவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள்
சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நம்பத்தகுந்த ஆதராங்கள் இல்லாமல், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் கூறப்படும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 09 ஆம் திகதி வரை அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டவர்களை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் கைது செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், விசாரணைகள் சுயாதீனமானதாகவும், பாரபட்சமின்றியும் இடம்பெறவேண்டும் என்பதனை வலியுறுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்