துமிந்த சில்வா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று பிற்பகல் சிறைச்சாலை அதிகாரிகளால் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போதிலும், அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பை இடைநிறுத்தியும், அவரை மீண்டும் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 30்ம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஜயவர்த்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் துமிந்த சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *