21ஆம் திருத்தசட்டம் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் பொது இணக்கம் ஏற்பட்டுள்ளது: மனோ

கொழும்பு,ஜுன் 03

21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக கட்சிகளுக்கு இடையில் பொது இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின் போது இந்த இணக்கம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற இணக்கமும் எட்டப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மட்டுமே பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிக்கலாம் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *