கொழும்பில் இன்று 7 மணிநேர நீர்வெட்டு!

இன்றையதினம்(04) கொழும்பின் புறநகர் பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்றையதினம் இரவு 10.00 மணிமுதல் நாளை (05) அதிகாலை 5 மணிவரை நீர்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அதன்படி, எத்துல்கோட்டே, பத்தேகம, மிரிஹானை, மாதிவெல, உடஹாமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொடை, பாகொட – விஜேராம ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *