திருகோணமலை ரயில் விபத்தில் காட்டுயானைகள் பலி

ஹபரனை – 120 ஆம் கட்டை தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்தன.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற தொடருந்து ஒன்றுடன் காட்டுயானைகள் நேற்றிரவு மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் மற்றுமொரு யானை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து காரணமாக கொழும்பு – ஹபரனைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *