யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர்களால் இன்று காலை 9 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ். கல்லூரிக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும்,
‘யாழ்ப்பாணக் கல்லூரியினைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர்களால் இன்று காலை 9 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ். கல்லூரிக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த சில வருடங்களாக யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபையிலே சர்வாதிகாரத் தன்மை மேலோங்கியுள்ளது .
சபையின் யாப்பு மோசமாக மீறப்படுவதனைக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றனர் .
இந்த நிலைக்கான முக்கியமான காரணமாக ஆளுநர் சபைத் தலைவர் பேராயர் டாளியல் தியாகராஜா இருக்கிறார் , அதிகாரம் முழுவதனையும் தன்னிடம் வைத்திருக்க வேண்டும் என்ற பேராசையின் காரணமாக , அவர் கல்லூரியினை நாளாந்தம் அழித்து வருகிறார் . ஆளுநர் சபையின் ஜனநாயக விரோதப் போக்கினால் , கல்லூரி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது .
ஆசிரியர் நியமனங்களிலே வெளிப்படைத் தன்மையற்ற நிலைமை தொடர்கிறது . கட்டடங்கள் சீரகுலைந்துள்ளன . அமெரிக்காவில் இருக்கும் தர்மகர்த்தா சபையினர் , ஆளுநர் சபையுடன் இணைந்து தம்மால் பணியாற்ற முடியாது எனக் குறிப்பிட்டு பாடசாலையுடனான 150 வருடங்களுக்கு மேற்பட்ட தமது உறவினை முறிப்பதற்கு முடிவு எடுத்துவிட்டார்கள் . இதனால் தர்மகர்த்தா சபையிடம் இருக்கும் .
நிதியில் 50 % ஆன நிதியில் இருந்து நன்மை பெறும் வாய்ப்பினைக் கல்லூரி . எதிர்காலத்திலே இழக்கக் கூடிய நிலை உருவாகி உள்ளது . ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வுகள் வழமை போல மேற்கொள்ளப்படவில்லை . கல்லூரியின் சொத்துக்களின் உரிமை தொடர்பாகப் பல குழப்பங்கள் நிலவுகின்றன .
பற்றிக்கோட்டா செமினரி ஆரம்பித்து 200 வருடங்களும் , யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பித்து 150 வருடங்களும் முடிவுறும் நிலையில் , வரலாற்று முக்கியத்துவம் மிக்க எமது கல்லூரி இன்னும் ஒரு சில வருடங்களிலே காணாமற் போய்விடுமோ என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டிருக்கிறது .
பின்வரும் விடயங்களிலே ஆளுநர் சபையினர் உடனடி நடவடிக்கைகளினை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் எதிர்வரும் சனிக்கிழமை 04 ஜூன் 2022 ஒரு போராட்டத்தினை முன்னெடுக்கிறோம் . எமது கோரிக்கைகள் ஏற்கப்படாவிடின் நாம் தொடர்ந்தும் போராடி கல்லூரியினை அழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுப்போம் .
- ஆளுநர் சபையின் யாப்பு மீறப்படுவது உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் . வகித்தல் யாப்புக்கு இணங்கக் கூட்டங்களை வைக்காது இழுத்தடித்தல் உறுப்பினர்கள் தமது பதவிக் காலத்துக்கு மேலாக யாப்புக்கு முரணான வகையில் உறுப்புரிமை சபையின் நிருவாகக் குழ எட்டு வருடங்களுக்கு மேலாகக் கூட்டப்படாம பாடசாலைக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படாம பாடசாலையின் நிதி அறிக்கைகள் முறைப்படி சமர்ப்பிக்கப்படானம் சபையின் சபை நியமன உறுப்பினர்கள் தெரிவிலே நிலவும் முறைகேடுகள் ஆசிரியர்களின் பிரதிநிதியின் தெரிவில் இடம்பெறும் முறைகேடுகள் சபைக்கான தெய்விந்தியத் திருச்சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதிலே நிகழும் முறைகேடுகள் என்பன உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் .
- தர்மகர்த்தா சபையினரால் முன்வைக்கப்பட்டு , பழைய மாணவர்களின் ஆதரவினைப் பெற்ற திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு , நர்மகர்த்தா சபைக்கு எதிராக அமெரிக்காவில் ஆளுநர் சபையினர் தாக்கல் செய்த வழக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் . வழக்குக்காகச் செலவிடப்படும் பெறுமதி மிக்க நிதியினைப் பயன்படுத்திக் கல்லூரியிலே நல்ல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் . 3. ஆசிரியர்களின் சம்பளம் உடனடியாக அதிகரிக்கப்படல் வேண்டும் . அவர்களின் சம்பள நிலுவைப் பணம் உடனடியாக வழங்கப்படல் வேண்டும் . ஓய்வூதியத் திணைக்களத்துக்கு அனுப்பும் வகையில் அவர்களின் சம்பளத்தில் இருந்து சுழிக்கப்பட்ட பணம் உடனடியாகத் திணைக்களத்திற்கு அனுப்பப்படல் வேண்டும் .
- கல்லூரியின் அசையும் , அசையாச் சொத்து விபரங்கள் உரிய ஆவணங்களுடன் உடனடியாக வெளிப்படுத்தப்படல் வேண்டும் .
- யாழ்ப்பாணக் கல்லூரியிலே பெற்றோர்களின் சங்கம் ஒன்று உத்தியோகபூர்வமான முறையிலே உருவாக்கப்படல் வேண்டும் ,
- ஆளுநர் சபையிலே பெற்றோருக்கான பிரதிநிதித்துவம் உருவாக்கப்படல் வேண்டும் பழைய மாணவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படல் வேண்டும் …
- பாடசாலையின் ஆளுநர் சபையின் தலைவராகத் தெள்ளித்தியத் திருச்சபையின் பேராயர் இருக்கும் முறை மாற்றப்பட்டு , 1947 இற்கும் 2015 இற்கும் இடையில் இருந்தது போல , தலைவர் உறுப்பினர்களில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் .
- யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபைக் கூட்டங்கள் யாவும் வட்டுக்கோட்டையில் கல்லூரியிலேயே இடம்பெற வேண்டும் , மேற்கூறிய விடயங்களிலே முன்னேற்றமும் , மாற்றமும் ஏற்படின் , கல்லூரியினால் வழங்கப்படும் கல்வி . இணைப்பாட வீதப் பணிகளின் தரம் மேலும் அதிகரிக்கும்.
தர்மகர்த்தா சபையினருக்கு முறைப்படி தயாரிக்கப்பட்டு , ஆளுநர் சபையின் அங்கீகாரம் பெற்ற வரவு செலவுத் திட்டம் அனுப்பப்படின் எமது கல்லூரிக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கும் இதனால் பாடசாலையின் கட்டடங்களைப் புணரமைத்து , வசதிகளைக் கூட்ட முடியும்.
ஆசிரியர்களின் பொருளாதார நெருக்கடிகள் குறைந்து , அவர்கள் கூடிய மனதி திருப்தியுடனும் , மகிழ்ச்சியுடனும் பாடசாலைக்குப் பங்களிக்க முடியும். வரவுசெலவத் திட்டம் தயாரிக்கப்படுவதும் , நிதி அறிக்கைகள் ஜனநாயக முறையில் உரையாடலுக்கு உட்படுத்தப்படுவதும் சிறந்த நிதி முகாமைத்துவக் கலாசாரத்தினைப் பாடசாலையில் உருவாக்கும் தேவைகளை அடையாளம் காண உதவும் .
கல்லூரியினால் சமூகப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேலும் கூடிய அளவிலான சேவைகளை வழங்க முடியும் . மேற்கூறிய கோரிக்களையும் , நலன்களினையும் முன்னிறுத்தி நாம் எதிர்வரும் சனிக்கிழமை 04 ஜூன் 2022 அன்று காலை ஒன்பது மீவனிக்குக் கல்லூரிக்கு வெளியிலே , தெல்லிப்பனை வீதியின் இரு மருங்கிலும் மேற்கொள்ள இருக்கும் போராட்டத்திலே பங்குபற்றும் படி டங்களைத் தயவுடன் அழைக்கிறோம் .
யாழ்ப்பாணத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகவும் , வரலாற்று ரீதியாக வடக்கின் கிராமப்புறக் கல்வி வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் , யாழ்ப்பாணக் கல்லூார் , பேராயர் டானியல் தியாகராஜா ன்ற தனிதயரினாலும் , அவரது ஜனநாயக சமூக உருவாக்கத்துக்கும் . சமூக நீதிக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றிய நெருங்கிய சுயதல சகாக்களினாலும் மேற்கொளப்பட்டிருக்கும் ஒரு பாரிய ஜனநாயக கன்ங்கு வெளிப்படுத்துகிறோம் . அத துணையாடி யாழ் மாவட்டப் பாரமகுமன்ற உறுப்பினர் ஒரு போரினாலி மேற்கொள்ளப்பு பருந்தும் ஒரு பபிகாயம் சமூகத்தின் மீதும் , பாதி கப்ட்ரி ” புறு பாதுகாப்பதற்கு நாம் மக்களாக் சமூகமாகப் போராட வேண்டும் .
இந்தப் பாத்தாலும் கூட இந்தத் தாக்குதலில் இருந்து எமது தவவரியில் போராட்டத்திலே நாம் வரும் இணைந்து கல்லூரியின் நலன்களும் , சமூகத்தின் நலன்களும் பாதுகாக்கப்பட யாழ்ப்பாணக் கல்லூரியினைப் பாதுகாப்போம் என்றவாறாக போராட்டம் அமைந்திருந்தது.
ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்காதே! கல்லூரி சொத்துக்களை அழிக்காதே! பேராயர் தியாகராஜா பதவியை விட்டு விட்டு வீட்டுக்குப் போ! சுமந்திரன் உடன் டீல் வேண்டாம்! கல்லூரி பணம் உங்களின் சுக போக உல்லாச வாழ்க்கைக்கா! தியாகராஜா வெளியேறு! வெளிப்படைத்தன்மை வேண்டும்! கல்லூரிச் சொத்தின் உறுதிகள் எங்கே! பாடசாலைக்குள் சுமந்திரனின் அரசியல் வேண்டாம்! வெளியேற்று வெளியேற்று சுமந்திரனை வெளியேற்று ஆளுநர் சபையா களவாணி களின் கூடாரமா! என்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி போராட்டங்களில் ஈடுபட்டனர்.






