கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட விசேட வைத்தியர் ஒருவருக்கு 11 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்களுக்கு 100 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் திணைக்களத்தின் குத்துச் சண்டை அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய இன்ஸ்பெக்டர் அஜந்த காமினி பெரேராவின் உறவினர்களுக்கு நட்டஈட்டை வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.
விபத்தின் போது, குற்றம் சாட்டப்பட்ட வைத்தியரின் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதுடன் மேலும் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக நீதிவான் மேலும் தெரிவித்தார். இதன்படி வாகன உரிமையாளர்கள் இருவருக்கும் தலா 500,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த பொலிஸ் பரிசோதகர் சர்வதேச குத்துச்சண்டை நடுவராக செயற்பட்டதாகவும் விபத்து இடம்பெற்றபோது அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் வாகனத்தில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
தனது மூத்த பிள்ளை விபத்தில் காயமடைந்து தற்போது அங்கவீனமடைந்துள்ளதாகவும் இலங்கை தேசிய நீச்சல் அணியில் அங்கம் வகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2018 செப்டெம்பர் 30 ஆம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட வைத்தியர் கவிங்க குணவர்தனவிற்கு எதிராக கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை, விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை மற்றும் பொலிஸ் பரிசோதகரின் மரணம் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்