பேலியாகொட,ஜுன் 04
பேலியாகொட மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயமொன்றை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சந்தையின் நாளாந்தச் செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர், பல்வேறு தரப்புக்களினால் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


