வெற்றுக்காணிகளில் பயிர்ச்செய்கை – ஜனாதிபதி நடவடிக்கை

பெருந்தோட்டக்கம்பனிகளுக்குச் சொந்தமான ,பயன்பாடு அற்று காணப்படும் நிலங்களைக் கண்டறிந்து, அவற்றில் உணவுப்பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் ரமேஷ் பத்திரண, அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜி.தர்மகீர்த்தி மற்றும் அமைச்சின் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9 ஆயிரம் 000 ஹெக்டேயர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலங்கள் உள்ளன. 23 கம்பனிகளுக்குச் சொந்தமான அந்த நிலங்களில் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு நடவடிக்கைகளை ஆரம்பியுங்கள்.

அத்துடன் தேயிலை ஏற்றுமதியினால் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச்செலாவணி வெளிப்படைத்தன்மையுடன் பேணப்படவேண்டும். அதற்காகத் தேயிலை ஏலத்தை டொலர்களில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராயுங்கள் என்றார்.

மேலும் தற்போது தேயிலை, இறப்பர், தென்னை உள்ளிட்ட ஏற்றுமதிப்பயிர்களுக்கு அதிக விலை வழங்கப்படுகின்றது என்றும் இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *