தெல்லிப்பளையைச் சேர்ந்த 20 வயது யுவதி, காதலனுடன் தீவுப் பகுதிக்கு சென்று மதுபானம் அருந்திய மயக்க நிலைமையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
தெல்லிப்பளையில் இருந்து மன்டைதீவிற்கு இடம்பார்ப்பதாக தெரிவித்துச் சென்ற யுவதியை நேற்றைய தினம் வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்ற சமயம் சிறிது நேரத்தில் வீழ்ந்துள்ளார்.
அவ்வாறு வீழ்ந்தவர் மயக்கமுற்று வீழ்ந்த்தாக கருதிய தாயார் முச்சக்கர வண்டியில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மயக்கமுற்று விழவில்லை எனவும் அவர் மது போதையில் வீழ்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று போதை தெளிந்த யுவதியிடம் மருத்துவர்கள் பொலிசார் விபரம் கோரியபோது காதலுடன் பயணித்து எனது சுய விருப்பின் பெயரிலேயே அருந்தினேன் எனத் தெரிவித்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்