திருமலையில் காணாமல் போன 3 யுவதிகளும் பொலிஸாரல் கண்டுபிடிப்பு

திருகோணமலை,ஜுன் 04

திருகோணமலையின் கந்தளாய்பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (03) காணாமல் போனதாகக் கூறப்படும் மூன்று யுவதிகளும் கந்தளாய் பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த யுவதிகளிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரியும் இந்த மூன்று யுவதிகளும் கடமை முடிந்தால்  வருவதாகவும் நேற்று  வீடு திரும்பாத நிலையில் இது தொடர்பில் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *