
கொழும்பு,ஜுன் 04
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனையில் 20% மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையின் குழந்தைகள் நல சிறப்பு வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமையே இதற்கு முக்கியக் காரணம் என விசேட வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இதன்போது, கார்போஹைட்ரேட் , புரதம் உள்ளிட்ட குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களின் குறைப்பாடு அவதானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தா்ர.
ச்சீஸ், பட்டர் போன்றவற்றை விட திரவ பால், முட்டை, சோறு மற்றும் பச்சை கீரைகளை உணவில் சேர்க்குமாறும், மஞ்சள் காய்கறிகளை பெற்றுக் கொடுக்குமாறும் வைத்தியர் குறிப்பிட்டார்.